எங்கோ எப்பொழுதோ படித்ததில் பிடித்தது - சிரிக்க, சிந்திக்க...
அந்த சலூன் கடையை நோக்கி அந்த சிறுவன் வருவதை பார்த்த அந்த கடைக்காரர், தன்னிடம் சிகை அலங்காரம் / சிகை திருத்திக் கொள்ள வந்தவரிடம் "சார் இப்ப இங்க வர்ற பையன சரியான முட்டாள்னு நிரூபிக்கிறேன் பாருங்கள்னு சொல்லிவிட்டு, ஒரு கையில் நூறு ரூபாயும் இன்னோரு கையில் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களையும் காண்பித்து எது வேணுமோ எடுத்துக்கோ என்றார்.
சிறுவன் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை மட்டும் எடுத்து சென்றுவிட்டான்.
கடைக்காரர் தன் வாடிக்கையாளரிடம் பெருமையாக சொன்னார் தினமும் இப்படி தான் சார் ஏமாந்து போறான்.
வாடிக்கையாளர் கடையை விட்டு வெளியே வந்தவர் அந்த சிறுவன் ஐஸ்கிரீம் கடையிலிருந்து வெளியே வருவதை பார்த்தார்.
அவனை கூப்பிட்டு ஏம்ப்பா இந்த வயசுல கூட உனக்கு நூறுக்கும், ஐஞ்சு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாதா என கேட்டார்.
சிறுவன் ஐஸ் கிரீமை சுவைதுக்கொண்டே
சொன்னான் அந்த நூறு ரூபாய எடுத்திட்டா
அன்றுடன் இந்த விளையாட்டு முடிந்துவிடுமே!!!
கடைகாரனை பாவமாய் பார்த்து சிரித்துவிட்டு போனார் வாடிக்கையாளர்!
நன்றி ;அமர்க்களம்