பிறவி பயன்..!

பொன்னில்லா பேதைக்கு பெண்ணாய் ஏன் பிறந்தேன்
பொல்லாத சந்தையிலே போதைதரு பொருளானேன்
நல்லார் யாருமில்லை நாற்றமிகு இன்
நானிலத்தில்
நயவஞ்சக நரிகள் கூட்டம் நடுதெருவில் விட்டதுவே
எழில்மேனி என்றுரைத்து என்னாசை ஏத்தி வைத்து
எட்டாத கனவு கண்டு ஏக்கமுடன் நான் வளர்ந்தேன்
கட்டழகு காளையொன்று காதலினால் முட்டி எனை
களவாடி சென்றதுவே கழிந்தபின் ஏனோ கொன்றதுவே..!

@@@@@@ஷாபீனா@@@@@@

எழுதியவர் : ஷாபினா (14-Sep-13, 12:16 am)
பார்வை : 178

மேலே