காதல் கவிதைகள்
*** உன் கொலுசின் ஒலி
என் இதயத்தின் துடிப்பு
*** உன் விடியல்கள் நீ விழிக்கையிலே
என் விடியல்கள் உன் விழிகளிலே
*** விழித்தால் வின்மீன்
இமைத்தால் மின்னல் - அய்யோ...
நான் அதில்
தடுமாறும் ஜன்னல்
*** அலைகளிடம் போராடி
ஜெயித்தேன் - உன்
விழிகளிடம் போராடி
தோற்றேன்
*** என் கல்லறை தூக்கத்திலும்
உன் கனவுகள்
*** எங்கேயோ கேட்கிறது
கொலுசொலி
காதுகள் முளைத்த
என் இதயத்திற்கு
சிறகுகளும் முளைத்துவிடுகின்றன
*** யாரோ கதவை
கதவை தட்டுகிறார்கள்
திறக்க முற்படும் முன்பே
உடைத்துவிட்டு
உள்ளே வந்துவிடுகின்றன
உன் நினைவுகள்
*** அடிப்பாவி...என்னைபோய்
கண்ணாடி பார்க்க
வைத்துவிட்டாயே