காதல் கவிதைகள்

*** உன் கொலுசின் ஒலி
என் இதயத்தின் துடிப்பு

*** உன் விடியல்கள் நீ விழிக்கையிலே
என் விடியல்கள் உன் விழிகளிலே

*** விழித்தால் வின்மீன்
இமைத்தால் மின்னல் - அய்யோ...
நான் அதில்
தடுமாறும் ஜன்னல்

*** அலைகளிடம் போராடி
ஜெயித்தேன் - உன்
விழிகளிடம் போராடி
தோற்றேன்

*** என் கல்லறை தூக்கத்திலும்
உன் கனவுகள்

*** எங்கேயோ கேட்கிறது
கொலுசொலி
காதுகள் முளைத்த
என் இதயத்திற்கு
சிறகுகளும் முளைத்துவிடுகின்றன

*** யாரோ கதவை
கதவை தட்டுகிறார்கள்
திறக்க முற்படும் முன்பே
உடைத்துவிட்டு
உள்ளே வந்துவிடுகின்றன
உன் நினைவுகள்

*** அடிப்பாவி...என்னைபோய்
கண்ணாடி பார்க்க
வைத்துவிட்டாயே

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (2-Jan-11, 5:02 pm)
பார்வை : 571

மேலே