+அப்ப‌ நாளைக்கு பார்க்கலாம்+

எமதர்மன்: ஏய் மானிடா! கெளம்பு கெளம்பு. அடுத்தது உன் பெயர் தான்.

மனிதன்:(தள்ளாடிய படியே) ப்ளீஸ். ப்ளீஸ். மிஸ்டர் எமராஜா, நாளைக்கு ப்ரண்ட்ஸோட சேர்ந்து ஒரு தண்ணிப்பார்ட்டி இருக்கு. அதுக்கு நான் கண்டிப்பா போயாகணும்.

எமதர்மன்: ஓ! சாரி! சாரி! நான் தான் தப்பா வந்துட்டேன். நாளைக்கு தான் நான் வந்திருக்கணும். நாளைக்கு தான் நீ, பார்ட்டில கலந்துகிட்டு, அளவுக்கு மீறி தண்ணி அடுச்சுட்டு, தேவையில்லாம ரகளை பண்ணிட்டு, அதே வேகத்திலயே பைக் எடுத்துட்டு, தாறுமாறா ரோட்ல போயி, என் லாரில அடிபட்டு அல்பாயிஸுல போவாய். சாரி! இப்ப நான் வரேன். அப்ப‌ நாளைக்கு பார்க்கலாம்.

மனிதன்:??!!!??

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (22-Sep-13, 8:06 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 125

புதிய படைப்புகள்

மேலே