ஒரு விரலாய்...மறு குரலாய் இருப்பாயடா .......(தொடர் பாக்கள் - 3) அகன்

யாரோடும் நட்புகொள் கண்டம் மற
ஊரோடும் சேர்ந்து வாழ். உயர்வுண்டு காண்

புறநானூற்று வீரம் வெளியில் கொள். பூரிக்கும்
அகநானூற்று இன்பம் உள் வாழ்வில் நிரப்பு. வசந்தம் காண்

தொழில் எதுவும் நேர்மையே. கற்றுத் தெளி அதில்
பழிபாவம் பொய்மை கையூட்டு இல்லை எனில்!

விளையாட்டு வகைபல ஆடு. வீறு சக்தி வலிபெறு
தலையாட்டும் பொம்மையாய் இராதே வாழ்வில்!

வரம்பில் பேசு. நினைப்பதெல்லாம் உரைக்காதே
நரம்பில் நெடியாய் தாய்மொழி நிரப்பு. நல்வாழ்வு காண்

தொடரும்...

எழுதியவர் : agan (25-Sep-13, 12:50 pm)
பார்வை : 96

மேலே