வைத்தெரிச்சல்
ஐநூறுரூபாய் விற்ற மீன்களை
வாதாடி, கூத்தாடி
இருநூருரூபாய்க்கு வாங்கிச்சென்றதில்
பெருமிதம் அவனுக்கு !
இவன் சாதனையை அவன் மனைவி கூட
புகழ்ந்து பேசுகிறாள் அவளது தோழிகளிடம்
ஒஸ்க்கார் விருது வாங்கியவன்கூட இவனைபோல்
சந்தோசித்திருக்க வாய்ப்பில்லை
அப்படியொரு சந்தோசம் அவனுக்கு !
பாவம் இவன்
தொண்டைக்குழியில் தொக்கிநின்று
தொல்லைசெய்த மீன்முள்ளை துரத்திவிட
அவன்செய்த கலவரங்களால்
திடீர் என்று அவன் வீடு ஓர்
குட்டி போர்க்களமாய் மாறிப்போனது .
அப்போதுதான் அங்கே
அவன் வீட்டு பூனையும் எதிர்வீட்டு பூனையும்
பேசிக்கொள்கிறன
மீன்காரன் வைத்தெரிச்சல்
சும்மா விடுமா என்று ...!