புதுக் குறுந்தொகை
நீ காற்று
எப்படி என்
குளிரைப் போக்குவாய்..?
நீ மழை
எப்படி என்
வெப்பத்தைத் தணிப்பாய்...?
நீ வண்டு
எப்படி என்
வாசத்தை முகர்வாய் ..?
நீ இலவம்
எப்படி என்
தூக்கத்தைப் போக்குவாய்...?
நீ அருவி
எப்படி என்
தாகத்தைத் தீர்ப்பாய்.....?
நீ கடல்
எப்படி என்னை
அமைதிப் படுத்துவாய் ...?
நீ நதி
எப்படி என்
வலையில் சிக்குவாய்...?
நீ சிலந்தி
எப்படி என்னை
சிறை பிடிப்பாய்...?
நீ தூண்டில்
எப்படி என்னை
சிக்க வைப்பாய்...?