காதலன் பொய் சொல்வான் !
கண்டதும் காதல் -
என்று பொய் சொன்னான் நம்பினேன்!
கனவினில் உன் தொல்லை -
என்று பொய் சொன்னான் நம்பினேன்!
காணாதபொழுது நரகம் -
என்று பொய் சொன்னான் நம்பினேன்!
ராணிபோல் பார்த்துக்கொள்வேன் -
என்று பொய் சொன்னான் நம்பினேன்!
உனக்காகவே உயிர்வாழ்கிறேன்
என்று பொய் சொன்னான் நம்பினேன்!
எல்லா பொய்யும் எனக்கு
சுகமாய் இருந்தது -
அதனால் நம்பி மகிழ்ந்தேன்!
உன்னை பிரிந்தால் என்ன செய்வாய்?
என்று கேட்டான் -
அதையும் பொய் என நம்பினேன் ...
பிரிந்தான் ...
என்னோடு அவன் சொன்ன முதல் மெய்!
புரிந்தது!