கடலுக்குள் நீந்தும் மரணங்கள்

ஒரு வேளை நீலக் கடல்கள்
மரணத்தின் மேல் பரவியிருக்கலாம்
கடல்கள் தன் பிள்ளைகளைத்
தின்கிறது
ஏனெனில் கரைகளிலிருந்து
கடலுக்கு செல்லும்
அப்பாவின் வருகை நிச்சயமற்றது
இந்தக் கடல் மகிழ்ச்சியானதல்ல
வலைகளை ஏற்றிச் செல்லும்
படகுகள்
திடீரென சுற்றிவளைக்கப்பட்டு
ஏற்கனவே நிம்மதியிழக்கச்
செய்ததுவாய்
அவலங்களோடு கரையேறுகின்றன
இதற்கு மேல் இனியும் நிகழாதுவென
வாக்குறுதி நட்பு நாட்டிலிருந்து வர
அதுபாட்டுக்கு தொடரப்படுகிறது
நித்திய கொலைகார்களின்
எல்லையேறும் சாக்கினால்
வலை உலர்த்தும் இடத்திலிருந்து
அப்பாவின் வருகைக்காய் வலை
வீசியிருக்கும்
குழந்தையொன்று விரும்பி உண்ணும்
மீன்களின் தசைகளில்
உருமாறியிருக்கும்
அந்த மீனவனின் கண்களும்
கதறல்களும்
எமக்குத் தெரியாமலும் கேட்காமலும்
போனதுவாய்.

தீராநதி
அக்டோபர்

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (3-Oct-13, 10:49 am)
பார்வை : 86

மேலே