உன் இதயத்தில்
கண்கள் செய்த சிறு தவறுக்காக
ஆயுள் முழுவதும் என்னை
ஆயுள் கைதியாக்கி விட்டாய்
உன் இதயத்தில்!!!!
உன் இதயத்தில் என்னை
சிறை வைத்து விட்டு
நீ மட்டும் என்னிடம் சொல்லாமல்
மண்ணுலகை விட்டு சென்றது ஏனோ?
உன் பிரிவின் கவலையில்
நான் கரைந்திருக்க
என் விழிகள் சிந்தியன பனித்துளிகளை
இறந்து போன என் இதயத்திற்காக.......!!!!!!!!