நீ மரம் ....நான் மனிதன் ....
நீ சுவாசித்தால்
எனக்கு சுவாத்திணறல்.
நீ சுவாசிக்காவிடில்
எனக்கு சுகமான சுவாசம்.
என் தேவையை எண்ணியே!
நீ முளைப்பதும், வளர்வதும்
உன் மரணம் கண்டே!-நான் திளைப்பதும்,
திடல் வெளியாய் வெட்டி எடுப்பதும்
மரம் வளர்ப்போம்!
மழை பெறுவோம்!!
பொது நல விளம்பரம்-பலகையடித்தே!
பட்டது பல மரம்.
கரியமில வாயுக்கு நீ சிவன்
கரியமில வாயுக்கு நான் பிரம்மன்
நாங்கள் படைகின்றோம்
நீங்கள் அழிக்கின்றீர்
நீங்கள் குறைவு ஆதலால்
ஓசோனில் ஓட்டை விரிவு
நாங்கள் விரிபடுகின்றோம்
உங்களைக்கொன்றே
எங்களை நாங்களே !
கொலை செய்துகொள்கின்றோம்
என .......
தெரியாமலேயே !