கல்லறைப் பூக்கள்
அவளுக்காக
ஒரு பூவைப் பறித்தேன்...
மற்ற பூக்கள் எல்லாம்
கண்ணீர் வடித்தன...
நான்
பூவை பறித்து
அவள் தலையில் வைக்க
நினைத்தேன்...
அவளோ
பூக்களை பறித்து
என் கல்லறையில்
வைக்க நினைக்கிறாள்...
அப்போதுதான் உணர்ந்தேன்...
அந்தப் பூக்களின்
கண்ணீருக்கான அர்த்தம்...