அச்சுப்பிழை!
'சரித்திர நாயகி' என்றதை
'தரித்திர நாயகி'யாய் கொண்டாள்!
'கனா நீ'என்றதை
'வினாவா' என்றாள்!
'மணம் முடிப்போம்' என்றதை
'பிணம் முடிப்போம்' என்றாள்!
'வாழ்க்கை கொடு' என்றதை
'வாழ்க்கை கெடு'வா என கேட்டாள்!
'காதல் கொள்' என்றேன்
'சாதல் கொள்' என்றாள்!
எல்லாமும் அச்சுப்பிழையாகவே இருந்தது!
புரியவில்லை காலமே...
ஒருவேளை
நானும் அச்சுப்பிழையோ?!...