தாய்
பத்து மாதம் சுமந்து
பக்குவமாய் காத்து
பல கஷ்டத்திலும்
பரிவுடன் என்னை தூக்கி வளர்த்தாய்...
தாளம் போட்டு
தாலாட்டு பாடி
தாலவட்டம் வீசி
தன்னை உறங்க வைப்பாய்...
இன்னல்கள் மத்தியில்
இன்முகத்துடன் தூக்கி
இன்பத்திலும் துன்பத்திலும்
இஷ்டனாக இருந்திடுவாய்...
பல் மடங்கு உயர்தவளே
பாசம் மிகுந்தவளே
பார் போற்றும் பெண் நீ
பறக்கட்டும் உன் புகழ் பாரெங்கும்...