அன்னை

தாய் என்ற சொல்லுக்கு
இணை ஏதும் இல்லையே..
தாய் காட்டும் அன்புக்கு
அணை ஏதும் இல்லையே..
தாயின் முகம் முதுமையால்
சுருங்கினாலும் அவள்
மனம் சுருங்கவில்லையே..
தாயின் முகம் கலையிழந்து
போனாலும் அவள் மனத்தில் ஓவியமாய்
என்றும் இருப்பது நான் மட்டுமே..

தன்னலம் இல்லமால்
என் நலம் காத்தாயே..
கண்ணுக்குள் என்னை வைத்து
நெஞ்சுக்குள் என் நினைவை வைத்து
மண்ணுக்குள் செல்லும் வரை
என் உயிர் போற்றினாயே...
என் அன்புத் தாயே..
உன் மகள் வாழ்கிறேன்
உன் நினைவுடன்..

எழுதியவர் : க. நீலா (12-Oct-13, 2:04 pm)
சேர்த்தது : Neela Mala
Tanglish : annai
பார்வை : 68

மேலே