உனக்கு புரியவில்லையா???
உனக்கு முன் வந்து,
உன் இருக்கையின் அருகில்
அமர்வேனே-
உனக்கு புரியவில்லையா??
உனக்கு தாகம் என்றதும்
ஊருக்கு முன்னே நீரை
கொடுப்பேனே-
உனக்கு புரியவில்லையா??
நீ உணவுக்கு செல்ல
சிறிது தாமதம் ஆனாலும்
நான் பசியால் துடிப்பேனே-
அப்போதும் புரியவில்லையா???
நீ விளையாடும் போது
உனக்கு வியர்க்கையில்
என் முகத்தை துடைப்பேனே-
அப்போதும் கூடவா புரியவில்லை???
உன்னை யாரும் திட்டும் போது
என் உயிர் நோக துடிப்பேனே-
அப்போது கூட புரியாத உனக்கு
நான் வந்து உன்னிடம்
என் அன்பை---
சொல்லும் போதா புரியும்????