காப்பாற்று

பெண்ணாலும் பொன்னாலும் வாழ்கை தொடங்கி
பெண்ணாலும் பொன்னாலும் வாழ்கையில் உயர்ந்து
பெரிய மனிதர்களில் ஒருவராய் வளர்ந்து
என் உயர்வுக்கு காரணம் இவை என கூறுவார்கள் இடையே
பெண்ணை கற்பழிக்கும் பதினாறு வயது இளைஞன் பாட்டியே கூட விடுவதில்லை
பிறந்த பெண்குழந்தை கூட விதிவிலக்கல்ல இவர்களுக்கு கற்பழிக்க
மிருகங்களை விட கேவலமான நடத்தை
ஏன் இந்த அவலம்
கை எடுத்து கும்பிட வேண்டிய பெண் இன்று
கற்பை பாதுகாக்க ஓட வேண்டிய அவலம்
காக்க வேண்டிய தாத்தா, தந்தை, தமையன்
இவனும் காமத்தை தணிக்க வந்தால்
என் செய்யும் பெண் உலகம்?
தவுறு யாரிடத்தில்
பெண்ணின் உடையிலா?
அப்படிஎன்றால் பெண் சிசுக்கள்?
சொல் மனித சொல்
மனித மிருகமே சொல்

எழுதியவர் : கீதா பாலசுப்ரமணியன் (15-Oct-13, 11:09 pm)
பார்வை : 1500

மேலே