ஏற்று கொள்வீரா என்னை??

அனுபவத்தில் முதிர்ந்தும்
வயதில் வென்றும்
எழுத்துகளில் சிறந்தும்
கவிதைகளில் வளர்ந்தும்
கதைகளில் பிறந்தும்
கட்டுரைகளாய் மலர்ந்தும்
இந்த வலை தளத்தில்
வேரூன்றி நிற்கும்
திறமை மிக்க ஆயிரம் மனிதர்களை கண்டேன்!

ஆயிரத்தில் ஒன்றாக
இந்த அரை குறை எழுத்துகளின் சொந்தகாரியான
அப்பாவி சிறுமி என்னையும்
ஏற்று கொள்வீர்களா என்று
திகைத்தேன்!
வியந்தேன்!
தமிழ் தாய் பொறுத்து கொள்வாளா
என் கிறுக்கல்களை!
பயந்தேன்!

பின் எனக்கு நானே சொல்லி கொண்டேன்!
அறிஞர் பலர்
ஆக சிறந்த படைப்புகளை பதித்திடும்
இந்த வலை தளத்தில்
என் கிறுக்கல்களுக்கும் இடம் இருப்பது
ஒரு ஆச்சர்யமே!
ஏற்று கொண்ட உள்ளங்களுக்கு என்
பணிவான நன்றிகள்!

எழுதியவர் : மது (17-Oct-13, 5:19 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 636

மேலே