அசையாத பொம்மைபோல்!

கண்ணசைத்து
கையசைத்து
தலையசைத்து
நீ பேசும் பேச்சுக்கள்
அசையவிடாமல்
கவணிக்கவைக்கும் என்னை!

எல்லாம் கேட்டபின்பும்
உன் அசைவுகளின்
தாளங்களுக்காகவே
மீண்டும் மீண்டும்
கேட்கத்துண்டும் என்மனது!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 5:45 pm)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 182

மேலே