!!!உனக்காக நான்!!!

என்னவளே
ரோஜாவனத்தில்
தினம்தோறும்
உனக்காக

சொல்லாமலே
நீ வருவாய் என
பூவிழி வாசலிலே-உன்
காதல் கிறுக்கன்

உயிரே உனக்காக
காதல் கவிதையாய்
ஆசையில் ஓர் கடிதம்
வரைந்தேன்

வசந்த மாளிகை
இல்லை இல்லை
தாஜ்மஹால் உனக்காக-என்
இதய கோயிலில்

கேளடி கண்மணி -நீ
கன்னத்தில் முத்தமிட்டதால்
அலைபாயுதே
என்மனவானில்

பிரியமுடன்
பிரியமானவளே
பூவே உனக்காக
பிரியாத வரம் வேண்டும்

யாதுமாகி -உன்னுடன்
காதல் கொண்டேன்
கள்வனின் காதலி
யாரடி நீ மோகினி

நட்புக்காக மறுபடியும்
நீ வருவாய் என
காதலுக்கு மரியாதையுடன்
உனக்காக நான் !

எழுதியவர் : நவநீதன் (முல்லைநீதன்) (11-Jan-11, 3:36 pm)
பார்வை : 531

மேலே