அப்பா.......
அப்பாக்கள்
தன் மகள்களை
தாயாய் நேசித்து
அம்மா என்றழைக்கும்வரை
அழியாது இவ்வுறவு........
மகள்களின் மனதில்
அப்பாவின் பாசம்
சித்திரமாய்
வரையப்படவில்லை .....
சிற்பமாய் செதுக்கப்படுகிறது.....
என்னை சுமந்த
தாயின்
கருவறை அழகை
காண்கிறேன்....
தந்தையின் கண்களில்..............