என்னில் வந்தவனே
நீ மறந்ததாய் சொல்வது அலைபேசியென்னை
மட்டுமல்ல என் அன்பையுமே....!
அலைகழிக்கத் தான் அழைத்தாயோ - கேட்கிறது
அலைபாயும் என் மனம்…!
அறிவாயோ என் அறைதனில் - உன்
வாசம் தனை…!
அச்சுபிறழாமல் உறக்கத்திலும் - உச்சரிக்கும்
உன் பெயர்…!!!
எனை உருகுலைக்கும் உன் - ஒரு
நொடி மௌனம்….!!!
உன் விழி திசைக்காக - எதிர்நோக்கும்
என் வினாடிகள்…!!!
அறையை அளந்து நிற்கும் - உன் விழிகளை
வருட விரையும் என் விழிகள்…!!!
தொடருவதால் தான் தூரம் போகிறாயோ என் தூயவனே!!!
தொடும் துணிவும் விடும் நினைவும் இல்லை இவளிடம்!!!
கரையும் பிறையோ தொடரும் கதையோ!!!
வழியும் உயிர் வடிந்து முடியும் முன்னே
வருவாயோ என்னுள் வந்தவனே…!!!
நிழல் படும் துரத்திலும் - என்னோடு
நில்லாதாவனே!!!
நிஜம் சொல் என்னுள் யுகம் யுகமாய்
பிரவேசிக்கும் உன் நினைவு - உன்னுள்
எனை ஒரு நொடியாவது ஊடுருவச் செய்கிறதா???