வாலியின் ரசிகன்
தலைமுறைகளை
தாண்டி வந்ததாக
சொல்லுகிறது உனது
தலை நரை ....
இருப்பினும் உன்
பாடல் வரிகளுக்காக
ஏங்குகிறது இளைய
தலைமுறை...
வயது
ஆக ஆக
சிந்தனையில்
வாலிபவம் ஆகும்
அதிசியம் நீ..
எதிரில் வந்தால்
கற்பனையை பாதி
எடுத்து விடுவாயோ
என்ற அச்சம்
கவிஞனுக்கு.....
முழுமையாய்
எடுத்து விடுவாயோ
என்ற அச்சம்
நிலவுக்கு....
திரை பாடல்
தான் உனது
கிஷ்கிந்தை
இங்கு உன்னை
மறைந்து அடிக்கவும்
எந்த கவி
ராமனும் இல்லை ......