விடிவு

ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து

தேயுதலை தேய விட்டு -தேயாது

உடல் வருந்தி உழைத்து

ஊனை உறக்கமாக்கி

உறங்கலினை ஊனமாக்கி

உணர்வுகளை உறையவைத்து

உறைதலுள்ளும் உறையாமல்

வேகத்தை வெறியாக்கி-உதிரத்தால்

சாயமிட்டு உச்சரிக்க மறுக்கும்

உயிர் வலிக்கும் தருணங்களில்

கசிகின்ற கடைக்கண்ணீரில்

கரைந்திருக்கும் தவிப்புக்களின் மூலக்கூறுகள்

சேலைத்தலைப்பில் முடித்து-இடுப்பில்

செருகியசதங்கள் போல உறவுகள்

தாலிக்கயிற்றில் சம்பந்தம் இல்லாமல்-கொழுவிய

பாதுகாப்பு ஊசிகள் போல நண்பர்கள்-இந்த

ஊனமுற்ற உறக்கத்தில் இருந்து விடிவு என்றோ??

எழுதியவர் : உங்கள் விதுஷன்.. (27-Oct-13, 6:05 pm)
பார்வை : 547

சிறந்த கவிதைகள்

மேலே