கண்ணீர்

பறக்க ஆரம்பித்த வண்டு ஒன்று
வேப்பம்பூவை நோக்கி வந்தது
தேனும் பருகியது
அதனையே அன்றாடம் ஆக்கிக்கொண்டது
ஒருநாள்
வேப்பமரத்தின் அடியில் இருந்த
மல்லிகையை கண்டது
தேனும் பருகியது
அதனையே அன்றாடம் ஆக்கிக்கொண்டது
ஒருநாள்
மல்லிகை கொடியின் உயரம்
வேப்பமரத்தை எட்டியது
வண்டு நலம் விசாரித்தது
அதனையே ஏளனம் செய்தது
வண்டைக் கண்ட வேப்பம்பூ
கண்ணீர் வடித்தது
குழம்பி தவித்தது
அதனையே தானும் ஏளனம் செய்ய துடித்தது
வேப்பம்பூ வேப்பமரத்தின்
குழந்தை அல்லவா?
வேப்பமரமோ செய்வதறியாது
வழி தெரியாது தானும்
கண்ணீர் வடித்தது

எழுதியவர் : (27-Oct-13, 8:41 pm)
சேர்த்தது : suhanyasaranya
பார்வை : 64

மேலே