ஓவியம்

விழிகளுக்கு
வெற்றுச் சுவரும்
ஒவியம்!

ரவியுறையுமுன்
வடித்திடு
காவியம்!

தாயமுதுண்ட நீ
ஆவமுதுண்டுவாழ்
தீர்க்கமாய்!

தழகனுன் விழி
நோக்கும்
சாந்தமாய்!

தழகியவள்
விழிகளாகும்
காந்தமாய்!

மடிசுமந்தோள்
அன்னமிட்டாள்
அன்பதாய்!

விந்தீந்தோன்
செருக்குற்றானுயர்
மாண்பதாய்!

விரல்களது
ஒவ்வொன்றும்
கோடிகள்!

எதற்காக
மனதிலே
கேள்விகள் !

அடிவைத்து
முன்னோக்கி
சென்றிடு!

வாழ்வதனை
சுகமாக
வாழ்ந்திடு!

உணர்வுகளை
உண்மையாக
வென்றிடு!

உள்ளமதை
ஊக்கமாக
வைத்திடு!

ஈன்றோரை
வணங்கிடுவாய்
மாண்பதாய்!

இதுவூழ்காண்
வாழ்ந்திடுவாய்
தீர்க்கமாய்!



...................................................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (31-Oct-13, 11:13 am)
பார்வை : 91

மேலே