உன்னை நினைத்து உருகுகிறேன் தினம் தினம் 555

என்னுயிரே...

என்னை உன்
உயிராக நினைத்து...

உன் உயிரையும்
கொடுத்து...

தென்றலில் நீ
கலந்து விட்டாய்...

தினம் தேடி
அலைகிறேன்...

நான் சுவாசிக்கும்
தென்றலில்...

கண்களில் தெரியாத
தென்றலில் நீ...

தென்றலில்
கலந்த பின்பும்...

உன்னை கண்ணில்
காண துடிக்கிறேன் ஒருமுறை...

புகை படம் கையில்
வைத்து கொண்டு...

புவியெங்கும்
உன்னை தேடி...

நாம் நடந்த பாதையில்
தனிமையில் நான்...

எனக்கு குடை பிடித்த
உன் தாவணி...

சாலையோரம் தாமதமாக
என் பயணம்...

என்னுயிரே உன்
அன்பு போல...

யார் என்மீது இனி...

உயிரானவளே
உருவமில்லா தென்றலில்...

உன் உருவம்
தேடி அலைகிறேன்...

என் மூச்சுகாற்றில்
நீ கலந்திருந்தும்...

கரைகிறேன் தினம்
கண்ணீரில்...

உன்னை நினைத்தே
உருகுகிறேன்...

நாளை உன்னைத்தேடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Nov-13, 8:08 pm)
பார்வை : 402

மேலே