பத்தினி இல்லை பன்னாடை

அவசர அவசரமாக மெடிக்கல் ஸ்டோருக்கு ஓடி வந்த பெண் கடைக்காரரை பார்த்து ஆத்திரமும் அழுகையுமாக "எனக்கு விஷ பாட்டில் ஒன்று வேண்டும் சீக்கிரம் கொடுங்கள்" என்றாள்.

கடைக்காரர் "எதற்கு?" என்றார்.

"என் கணவனை கொல்வதற்குத் தான்" என்றாள் அந்த பெண். உடனே கடைக்காரர் பதறி, ஐயோ டாக்டர் சீட்டு இல்லாமல் விஷம் தர மாட்டேன். உடனே அப்பெண் என் கணவன் மோசமானவன். நான் இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறான். இந்த போட்டோவை பாருங்கள் எனக் காட்டினாள். அதைப் பார்த்த கடைக்காரன் கடும் கோபமாகி இந்த அயோக்கியனை உடனே கொல்லுங்கள் என விஷ பாட்டிலை எடுத்து கொடுத்தான். கடைக்காரன் மனம் மாறியது எப்படி?

ஏனென்றால் போட்டோவில் அந்த பெண்ணின் கணவனுடன் உல்லாசமாக இருந்தது கடைக்காரனின் மனைவி.

எழுதியவர் : muhammadghouse (5-Nov-13, 11:40 pm)
பார்வை : 136

மேலே