யதார்த்தம்
காகம் கரைந்த்தது
குயில் பாடியது
மயில் ஆடியது .
வானம் பொழிந்தது
காற்று வீசியது
கட ல் பொங்கியது.
மனம் பதறியது
கண் சிவந்தது
உடல் துடித்தது
வேதனையும் வாட்டும்
மகிழ்ச்சியும் திளைக்கும்
இரண்டும் போட்டியிடும்.
வாழ்வு தான் பாடலும்
அது தான் ஆடலும்
அது வே யாவும்.
நெகிழ்ந்து நழுவி
கசிந்து வடிந்து
நிற்பதே யதார்த்தம்