கவிதை வந்தால் காதல் வரும்
காதலித்தால்
கவிதை வரும் என்று
கவிதை எழுதத் தெரியாத ஆண்கள் சொன்னார்கள்
கவிதையாலேயே
காதல் வந்தது என்ற
கருத்தை அவர்களுக்கு சொல்லி விடுகிறேன்...
காரணம் அவர்கள்
கவிதையை கண்ட பிறகே
காதல் வந்தது.....!
ஆம்....!
ஒவ்வொரு ஆண் மகனுக்கும் பிடித்த
ஒயிலான முதல் கவிதை அவனது
காதலிதானே......!
எனவே
கவிதையால்தான்
காதலே வந்தது ...!