என்னை விட்டு போகாதே

என்னை விட்டுப் போகாதே

விட்டுவிட்டுப் போகாதே

என நான் உன்னை
கெஞ்சப் போவதுமில்லை

உன்னுடன் அழைத்துப் போ
என் அழவும் போறதில்லை.....

வேதனை கலந்த ...என்
ஒரு புன்னகை....போதாதாடா......

உன்னை இம்மி நகரவிடாமல்
இருந்த இடத்தில்..நிற்க வைக்க......

இல்லை

தோளோடு தொத்திக் கொண்டு
என்னையும் சுமந்து செல்ல வைக்க...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Nov-13, 2:19 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 665

மேலே