உணர்வுகள்
உன்னால் எனக்குள்
பிரசவிக்கும் உணர்வுகளை
ஆனந்த ..துக்க..உதிரம் கொட்டி
கொட்டி அவிழ்த்துக்
கவிழ்க்கிறேன்........
மூன்று ஆயிரங்கள் தாண்டி
என் வீடெங்கும் தவழ்கிறது
கால் முளைத்த கவிக் குழந்தைகள்.....
இருந்தாலும் .......
இன்னமும் இன்னமும்
என ......கரு சுமக்க
உன் உயிரமுதம் கேட்கிறதடா.....
உன் நேசம் ருசித்து
அருமையுணர்ந்த
என் தாகமடங்கா
தவிப்புகள்............!!!!!