அகரமுதல்வன் கவிதை 2

மவுனித்த சொற்களிலிருந்து பேசத் தொடங்குகிறது காதல்
நீர்மை ததும்பும் ஜீவநதிக்குள் விழிகள் கிளை பரப்ப
அந்தர மிதப்பில் சிறகுகளற்று பறக்க முயலுமென்
சிந்தையில் ஊறிய உன் நிழல்
என்னையே பின் தொடரும்
சூன்ய பிராந்தியத்தின் தொடக்க கோட்டில்
உயிர் நுனி சிலிர்த்து பூக்க
பிரபஞ்சம் தாண்டிய பிரபஞ்சமொன்றின்
வேலிகளில் கொடிவிடுகிறது முத்தப்பிரமாணங்கள்
உன்னிலேயே பயணித்து
உன்னிலேயே சஞ்சரிக்கும்
மென்மையான பகலொன்றில்
காதலின் குளிர்மை செதுக்கப்பட்டிருந்தது
துயரத்தின் சூட்சுமங்கள் அறிந்திராத
குழந்தையின் அழுகையாய்
மென்மையான சுடரொழுகும் குப்பி விளக்கொன்றின்
வெளிச்சத்தில் கவிதைகள்
இருள்மை கொண்டாடும் நெடிய நாட்களால்
நீயில்லாத நிகழ்காலத்தின்
படிமங்களிலும் உவமைகளிலும்
வனங்களில் மூண்டெழும் நெருப்பின் முகம்.

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (14-Nov-13, 1:50 pm)
பார்வை : 144

மேலே