என் அன்பே

தாயை பிரிந்து தவிக்கும் போதும்
தந்தை நிழலை விட்டு பிரியும் போதும்
நொடியில் மலரும்
உன்நினைவு
துணையாய் வந்து
தந்தது புது உறவு ..
தோள்களில் நேசம் நானும் கண்டேன் ..
தோழமை பாசம் உன்னில் கொண்டேன்..
விழிகளின் நீரை
ஆனந்தமாக்கினாய் ,
அன்பால் நிறைத்தே வாழ்வை அற்புதமாக்கினாய் ..
உயிரை விடவும்
நான் துணிந்தேன் !
உன் அருகாமை தீண்டலில்
ஒரு உறுதுணை கண்டு..
உயிருனும் மேலாய்
எனை சுவாசித்தாய்,
என் சுவாசமெல்லாம்
சந்தோஷ காற்றை தூவிடவே
நீயும் வந்தாய்...
என் விழி மலரும் கனவுகளை
நனவாக்கினாய்
நான் சொல்லும் முன்னமே !..
என் அசைவுகளை
உன் உணர்வாக்கினாய் ..
என் உணர்வுகளையோ
உன் உயிராக்கினாய் ..
என் நினைவுகளை மட்டுமல்ல
என் நிழலையும்
நீ நேசிக்கிறாய் ..
உனக்காகவே
என் நிமிடங்களும் ,
நினைவுகளும்
காத்திருக்கிறது...
என் அன்பே ,
அன்பின் தேடலுக்கு எல்லை இல்லை
என் தேடலுக்கு நீயே எல்லை...

எழுதியவர் : kk (14-Nov-13, 6:15 pm)
சேர்த்தது : confidentkk
Tanglish : en annpae
பார்வை : 133

மேலே