என்று விடியும் எனக்கு
ஒரு முறை விடிந்திடுமா
கடினம் முடிந்திடுமா
விடிகையில் விடியுமென்று
என் வாழ்க்கை முடிந்திடுமா ???
ஜில்லென சிறகடிக்க
நெஞ்சம் ஏங்கிடுதே
தனிமையை தகர்த்தெறிய
ஏக்கம் பிறந்திடுதே
படிப்பினை கற்று கொள்ள
வாழ்க்கை தொலைக்கின்றேன்
வாழ்க்கை தொலைத்த பின்
படிப்பினை என்ன செய்ய
விதியை நொந்து கொள்ள
விரக்தி எனக்கில்லை
நடப்பது விதி என்று
ஏற்றிட மனமில்லை
மதியால் வெல்ல எண்ணி கொண்டு
நாளும் தோற்கின்றேன்
தோல்வியை படிக்கல்லாய்
மாற்றிட பார்கின்றேன் ............