உன்னை கருவில்

உன்னை கருவில்
ஈன்றெடுத்த தாய்க்கு
பிழைக்க இடமில்லையா
உன் வீட்டுக்குள்

பிள்ளை இல்லையென்று
என்னை தள்ளிவைத்த
ஜனங்களின் வாயை
அடைக்க பிறந்தாயடா......

இன்று அந்த ஜனங்கள்
நடமாடும் தெருவில்
என்னை உயிரோடு
பிணமாக போட்டாயடா

அம்மா அம்மா என்று
என்னை சுத்தி சுத்தி வந்தாயடா
இன்று அம்மா அம்மா என்று
என்னை கையேந்த வைத்தாயடா

உன்னை பெற்றதில்
சுகம் கண்டேன்
வளர்த்ததில் பெருமிதம்
கொண்டேன்
ஆனால் என்னை
தெருவில் அனாதையாய்
விட்டாயடா

உன் மேல் வெயில்
படக் கூடாது என்று என்
முந்தாவனையில் மறைக்க

இன்று என் மேனியை
மறைக்க நல்ல ஆடை
இல்லையடா கண்ணா

இன்னும் எனக்கு
என்ன ஆனாலும்
உன்னை விட்டுகொடுக்காமல்
பேசும் உறவு தாண்ட
உன் அம்மா

உன் குழந்தை
பருவத்தை நினைத்து கண்ணீருடன்
வாழும் உன் தாய்

உன் தாய்
மூச்சு நின்றப்பின்
கொல்லிப் போட வாடா
என்று அழைக்கிறேன்
வருவாயா
இது உன் தாயின் கடைசி ஆசை........

எழுதியவர் : kalaiselvi (18-Nov-13, 6:17 pm)
Tanglish : unnai karuvil
பார்வை : 113

மேலே