''பதினாறு ''

வயது பதினாறு ;

காதலின் உற்பத்தி மலை ,
மனம் உருவாக்கிய ''நதி''
வந்தே தீரும் ''விதி''

''ஆறு'' இருந்தும் ,
ஆசைகள் ஆகும் ''நூறு''

கிளைநதியாக பிரித்தாலும்
கண்கள் ,
கண்டவனையும் , கண்டவளையும்
கடலாய் தான் காட்டும் ;

கனவுகளே ,
காட்சிகளை நிர்ணயிக்கும் .

மனமோ ,
கனவுகளில் நிதானமிழக்கும் .

செவியில் நுலையும்
காற்று கூட,
கற்பிழக்கும் ........

அந்த, ''பதினாறு வயது ''

கண்கள்
கடலைக் கூட,
தாண்டி பார்க்கும் ........

அந்த ,வயது ..

எண்ணங்கள் எரிமலையை
எட்டிப்பார்க்கும்
அந்த ,வயது ...

இன்பமோ ,துன்பமோ '
தெரிந்தும் புரியாது .....!
புரிந்தும் தெரியாது .......!


'பதினாறு வயது ''

எழுதியவர் : பூவிழி (23-Jan-11, 6:46 pm)
சேர்த்தது : poovizhi
பார்வை : 489

மேலே