''பதினாறு ''
வயது பதினாறு ;
காதலின் உற்பத்தி மலை ,
மனம் உருவாக்கிய ''நதி''
வந்தே தீரும் ''விதி''
''ஆறு'' இருந்தும் ,
ஆசைகள் ஆகும் ''நூறு''
கிளைநதியாக பிரித்தாலும்
கண்கள் ,
கண்டவனையும் , கண்டவளையும்
கடலாய் தான் காட்டும் ;
கனவுகளே ,
காட்சிகளை நிர்ணயிக்கும் .
மனமோ ,
கனவுகளில் நிதானமிழக்கும் .
செவியில் நுலையும்
காற்று கூட,
கற்பிழக்கும் ........
அந்த, ''பதினாறு வயது ''
கண்கள்
கடலைக் கூட,
தாண்டி பார்க்கும் ........
அந்த ,வயது ..
எண்ணங்கள் எரிமலையை
எட்டிப்பார்க்கும்
அந்த ,வயது ...
இன்பமோ ,துன்பமோ '
தெரிந்தும் புரியாது .....!
புரிந்தும் தெரியாது .......!
'பதினாறு வயது ''