உன்னுள் சகலமுமாய் நானிருப்பேன் ....
என் வைர நிலவே '
உன் நிழல் சுமந்து
நடக்கிறது ,
என் உயிர் ;
எத்தனை நிலவு உன்னோடு ;
எத்தனை சூரியன் உன்னோடு ;
நீ மட்டும்
என் கண்ணோடு
காட்சிகள் கலையவில்லை ,
காரணம் தெரியவில்லை
விழி விழித்து
முகம் காண
வழி விட்டு
நீ நிற்க
வருவேன் ...
உன் அருகே ,
முகவரி தொலைந்தாலும்
என் முகவரி நீ தானடி ..
என்னுள் சரி பாதி '
நீ இருக்க
உன்னுள் சகலமுமாய்
நானிருப்பேன் ....
என்'''''''
பூவிழி ..............!