உன்னுள் சகலமுமாய் நானிருப்பேன் ....

என் வைர நிலவே '
உன் நிழல் சுமந்து
நடக்கிறது ,

என் உயிர் ;

எத்தனை நிலவு உன்னோடு ;
எத்தனை சூரியன் உன்னோடு ;

நீ மட்டும்
என் கண்ணோடு
காட்சிகள் கலையவில்லை ,

காரணம் தெரியவில்லை

விழி விழித்து
முகம் காண
வழி விட்டு
நீ நிற்க
வருவேன் ...
உன் அருகே ,

முகவரி தொலைந்தாலும்
என் முகவரி நீ தானடி ..
என்னுள் சரி பாதி '
நீ இருக்க

உன்னுள் சகலமுமாய்
நானிருப்பேன் ....

என்'''''''
பூவிழி ..............!

எழுதியவர் : பூவிழி (23-Jan-11, 7:07 pm)
சேர்த்தது : poovizhi
பார்வை : 430

மேலே