என் கள்வனே

என்று நீ என்னுள்
எனையறியாமல்
கள்வனாய் நுழைந்தாயோ
அன்றிலிருந்து நான்
பிரசவிப்பதும்
என்னுள் மடிவதும்
நித்தம் நித்தம் நிகழ்வுகளாகின !

உன்னைகாணும்
ஒவ்வொரு முறையும்
நான்
புதிதாய் பிரசவிப்பதை உணர்ந்தாயோ
கள்வனே !!

உன்னைப்பிரியும்
ஒவ்வொரு கணமும்
நான்
எனக்குள்ளே மடிவதை உணர்வாயோ
என் கள்வனே !!!

எழுதியவர் : வானதி (22-Nov-13, 11:46 am)
பார்வை : 226

மேலே