என் கள்வனே
என்று நீ என்னுள்
எனையறியாமல்
கள்வனாய் நுழைந்தாயோ
அன்றிலிருந்து நான்
பிரசவிப்பதும்
என்னுள் மடிவதும்
நித்தம் நித்தம் நிகழ்வுகளாகின !
உன்னைகாணும்
ஒவ்வொரு முறையும்
நான்
புதிதாய் பிரசவிப்பதை உணர்ந்தாயோ
கள்வனே !!
உன்னைப்பிரியும்
ஒவ்வொரு கணமும்
நான்
எனக்குள்ளே மடிவதை உணர்வாயோ
என் கள்வனே !!!