இன்றைய விடியலே இனிய கவிதையே

புன்னகைக் கவியே
புதியமென் மொழியே

பிள்ளையே கிளியே வெகு
பிரியமான தமிழே

வெற்றிப் பெண்ணே உறங்கு
விடிந்ததுபோல் நடிக்குது உலகு...!

இமை மூடி நீ புன்னகைக்கையில் என்
இதயத்துக்குள் இசைக் கச்சேரி.....

பெண்குழந்தைகள் பிறக்க வேண்டும் - மானுடர்
பெருமிதமே கொள்ளவேண்டும்.....

செல்வமே நீதான் என்றே அவர்கள்
சிரித்தே உனைக் கொண்டாட வேண்டும்...

இன்றைக்குப் பிறந்த நாளைய விடியலே - மன
இருளைப் போக்கியே எனை அன்னையாய் மாற்றடி

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Nov-13, 8:20 am)
பார்வை : 78

மேலே