இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

காற்று
***************
தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் --வாடை
கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் ---மேலை


*****************
பெண்கள்
**************
தமிழில் பெண்களுக்கு அவர்களின் ஒவ்வொரு பருவத்துக்கேற்ற பெயர்கள் உள்ளன.

நாற்பது வயதுக்கு உட்பட்ட பெண்களின் பருவங்களை ஏழாகப் பிரித்திருக்கிறார்கள்.

ஐந்து வயது முதல் ஏழு வயது முடிய
பேதைப் பருவம்

எட்டு முதல் பதினொன்று முடிய
பெதும்பைப் பருவம்..

பன்னிரெண்டும்,பதிமூன்றும்
மங்கைப் பருவம்.

பதினான்கு முதல் பத்தொன்பது முடிய
மடந்தை.

இருபது முதல் இருபத்தைந்து முடிய
அரிவை.

இருபத்தாறு முதல் முப்பத்தொன்பது
முடிய தெரிவைப் பருவம்.

நாற்பது முதல் பேரிளம்பெண்.
***********************

நன்றி ;இருவர் உள்ளம் தளம்

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (23-Nov-13, 8:05 pm)
பார்வை : 67

மேலே