அமைதி தேடி
துணியால கண்ண கட்டி
விலங்கால கைய பூட்டி
நிர்வாண உடல-புல்தரையில்
நிர்பந்தித்து அமரவைத்து
காலணி அணிந்த காலால
கருணையின்றி எத்தி
சரிந்த உடலின் பின் தலையில்
துளைத்தது ஒரு தோட்டா
சிந்திக்காத செயல்பாட்டால்
சிந்தியது இரத்தம் சிங்களத்தில்
தாரை வார்த்தான் கர்ணனைப்போல்
தன்னுயிரை ஒரு சிங்கள தமிழன்
டி,வியில பார்த்ததொரு
காட்சியென்றாலும்-ஒன்றுமறியா
அப்பாவிகளைக் கொன்றது
பஞ்சமா பாதகம் தான்
புத்தனை வழிபட்டவன்
புத்தன் போதித்ததை மறந்து
துப்பாக்கியின் துணையோடு
அப்பாவி மக்களைக் கொன்றான்
மற்ற மனிதர்களோ
புத்தன் வழி பின்பற்றி
மனதின் ஆசையைத் துறந்து
உற்றார் உறவினரைப் பிரிந்து
இலங்கையை விட்டுவிட்டு
போகுமிடம் தெரியாமல்
எங்கெங்கோ அலைகிறார்கள்
போதி மரத்தின் அமைதி தேடி.