காலம் சென்ற காதலிக்கு ஒர் கடிதம்

நான் உன்னை நிச்சயம் ஒருபோதும் வெறுத்ததில்லை. ஒரு வேளை உன் மீது நான் கோபத்தைக் கொட்டினாலோ அல்லது வெறுப்புடன் பேசினாலோ நிச்சயம் அது அதிருப்தியின் அடையாளம் அல்ல. மாறாக, உன் மீது நான் எத்தனை அன்பு செலுத்துகிறேன் பார் என்பதை உணர்த்தும் ஆதங்க வார்த்தைகள்தான். - உன்னைச் சந்தித்தது விதி... உன்னுடன் நட்பு கொண்டது ஒரு வாய்ப்பு. ஆனால் உன்னிடம் காதலில் வீழ்ந்தது, என்னையும் அறியாமல் நடந்தது, என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அதுதான் காதல்....! - என்னிடம் நீ சொன்ன பொய்க்காக நான் கோபமாக இல்லை. என்னை நீ நம்பவில்லையே என்ற ஆதங்கம்தான் என் உண்மையான கோபத்திற்குக் காரணம். - காதல் ஆறுதல் அல்ல. அது ஒளி, வழிகாட்டி, வெளிச்சக் கீற்று. - நான் இன்னும் வாழ்கிறேன், தொடர்ந்தும் வாழ்வேன்.. நீ என்னுள் உயிர்ப்புடன் இருக்கும் வரை - அதே காதலுடன்.

எழுதியவர் : ராமசந்திரன் J (30-Nov-13, 11:24 pm)
சேர்த்தது : ramj
பார்வை : 165

மேலே