தோழி

நினைக்கும் தருவாயில்
நெஞ்சில் தோன்றிய
நிறைவான ஒவியம் அவள்

அவள் கெஞ்சலிலும்
கொஞ்சலிலும் ஒர்
உன்னத அன்பிருக்கும்
ஒப்பிட முடியா
உலகமிருக்கும்

அவள் என்னைப் பற்றி
கூறுகையில் ஒர் கர்வமிருக்கும்
"அவன் என் நண்பனென்று"

அவளை விட்டு விலக
ஆயிரம் காரணம் கொண்டாலும்
என்னைத் தொடர
கோடி காரணம் கண்டெடுப்பால்

நான் இளைப்பாற
மரமானாள்

நான் நனைய
மழையானால்

காதல் கொள்ள
கவிதையானவள்

கோடை இடியில்
குளிர்ச்சியானவள்

நிதம் நான் காணும்
நாட்காட்டியானவள்!!!

விழிக்கும் போது
விழித்திரையில் அவள்!!!

என் இரவின்
விடியல் அவள்

உறங்கும் போதும்
அவள் குறல் என்
செவியறையில்!!!

அவள் வேண்டுதலின்
என் கனவு நிரம்பியிருக்கும்

என் தேவைகளில்
அவள் தேடல்
ஒளிந்திருக்கும்!!!

தோழியாய்
தொல்லைக் கொள்ள
எல்லையற்றவள்!!!

அவளைப் பற்றி
எழுதும் போதுதான்
வார்த்தைகள்
பிரசிவிக்கிறது
அவள் குழந்தையானால்

அவள் எனக்கு
குழந்தையானதால்
நான் அவளுக்கு
தாயானேன்

எழுதியவர் : ராமசந்திரன் J (30-Nov-13, 11:45 pm)
Tanglish : thozhi
பார்வை : 279

மேலே