ஏதிலார் குற்றம்போல்

நுரைத்துச் சுழித்தோடும்
நதிகளெல்லாம்

எதிர்க்கும் பாறைகளை ,
மோதி வெற்றிகொள்ளவதில்லை .

குற்றம் கூறிக்
காலத்தை விரயம்
செய்வதில்லை .

அடுத்த மணித்துளியில்
பாதை வகுத்துப்
பாய்ந்தோடும் நீரோட்டம்.

மண்ணுயிர்களின்
வளம் ஒன்றுதான்
நோக்கம் ....எனும்போது

எதிர்பென்றால் குறைசொல்லி
ஏதிலார் குற்றம் காணும்
இறைவனின் மைந்தர்களே!

ஒன்று ......

எதிர்பார்பைக் குறுக்கலாம்

அல்லது

எதிர்ப்பை இணக்கமாக்கலாம்.

"அந்த நதியைப் போல "

எழுதியவர் : minkavi (1-Dec-13, 11:28 pm)
பார்வை : 120

மேலே