பொறாமை
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பொறாமை என்னும் சாத்தானை மனதிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது.
'ஆமை புகுந்த வீடும், அமீன புகுந்த வீடும் உருப் படாது' என்பது பழமொழி.
இந்தப் பழமொழியில் ஆமை என்றால் 'ஆமை' என்ற பிராணியைக் குறிப்பதல்ல.
மனிதனை வீழ்த்தும் குணங்களில் முதன்மையானது இந்த பொறாமை குணம்தான்.
'பொறாமை' என்ற குணம் நம் உடல் முழுவதும பரவி, நமது சிந்தனைகளை சிதைத்து விடுகிறது. பொறாமை குணத்தின் காரணமாகத்தான் கௌரவர்கள் நூறு பேரும், தங்களது சாம்ராஜ்யத்தையே இழந்தார்கள். இந்தக் கதை உங்களுக்குத் தெரியாததல்ல.
இயலாமையின் வெளிப்பாடுதான் பொறாமையின் அடிப்படை.
பொறாமை உள்ளவர்களுக்கு வேறு எதிரியே தேவையில்லை. அது ஒன்றே போதுமானது.
ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய அளவீடை உடலாலும், பதவியாலும், செல்வத்தாலும் கொண்டுள்ளார்கள்.
தனது அளவீடை வைத்து அடுத்தவர்களின் முன்னேற்றத்தை அளக்கிறான். பின்பு ஒப்பிடுகிறான். பின்பு தன்னுடைய வெற்றியின் அளவு குறையும் போது, அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை அடைகிறான்.
தன்னம்பிக்கையின் எதிரியே இந்த பொறாமை தான்.
பொறாமை குணம் உள்ளவர்களுக்கு நிச்சயமாய் தன்னம்பிக்கை இருக்காது. பொறாமை என்னும் கண்ணாடி அணிந்து கொண்டால் உலகில் எல்லாமே உங்களுக்கு வெறுப்பாகவும், உங்களை அனைவரும் ஒதுக்கி விட்டதாகவுமே உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வீர்கள்.
ஆகையால் பொறாமையைப் புறக்கணியுங்கள், பொறாமையை விலக்கி விடுங்கள். இல்லையெனில் நமது முயற்சி, இலட்சியம், உழைப்பு அனைத்தையும் திசை மாறச் செய்து விடும். அதலபாதாளத்தில் அது நம்மைத் தள்ளி விடும்.
பொறாமையையும், சுயசிந்தனையும் ஒழுங்கு படுத்திக் கொண்டால் நாமும் ஒரு வெற்றியாளர் தான்.
===============================================
படித்தேன். ரசித்தேன். சுவைத்தேன். பகிர்ந்தேன்.