சுனாமி

பேரலையே
உனக்குத்தான்
எத்துனை அன்பு
எம்மக்களின் மீது

லட்சம் லட்சம்
மக்களை
வாரியணைத்தாய் !

இருப்பினும்
சடலங்களாய்
கரை ஒதுக்கியதேனோ !!

நீயும்
வேலைமுடித்ததும்
ஒதுக்கும்
மாகலையை
மனிதனிடம்
கற்றாயோ !!!

எழுதியவர் : வானதி (4-Dec-13, 7:25 pm)
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே