காதல் விருச்சமாய் நீ
காதல் விருட்சமாய் நீ
==================
இல்லையென நான் மறுக்க
என்னில் நினைவுகளாய்
நிரம்புகிறாய்
கல்லெறிந்த நீர் திவலைகளாய்
அலையுதென் மனம்
நீ விதைத்துச் சென்ற
காதல் விதையொன்று
கிளைபரப்பி
அகண்ட விருட்சமாய்
வேரூன்றி நிற்கிறதெனக்குள்
அம்மரக் கிளை அமர்ந்த
மனப் பறவையை தூதாய்
அனுப்பிவைத்தேன் உன்னிடம்
அண்ட பெருவெளி சுற்றி
உன்னிடம்
அடைக்கலமானது அப் பறவை
தஞ்சம் வந்த பறவையை
நெஞ்சஅணைத்துக்கொள்ளடா