சமையல் குறிப்பு 1
மோர்க்களி.
தேவைப்படும் பொருள்கள் :
மிதமான புளிப்பு மோர் - இரண்டரை கப் (புளிப்பு மோர்)
மெல்லியதாகச் சலித்த அரிசி மாவு - ஒரு கப்
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
மோர் மிளகாய் - மூன்று
ருசிக்கு உப்பு
வாஸனைக்கு - துளி பெருங்காயம்
சிறிது கறிவேப்பிலை.
செய்முறை :
மாவை உப்பு சேர்த்து மோரை விட்டு கரைத்துக்
கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காய வைத்து மிளகாயை நன்றாக கிள்ளிப்போட்டு வறுத்துக் கொண்டு கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பைச் சேர்த்துத் தாளித்து கறி வேப்பிலையுடன் கரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். தீயை மிதமாக வைத்து அடிக்கடி கிளறவும். மாவு வெந்து சுருண்டு
வரும் போது சற்று மூடி வைத்துப் பிறகு இறக்கவும்.
ஈரக் கையினால் மாவைத் தொட்டால் வெந்த மாவு
கையில் ஒட்டாது.
இதமான சூடு இருக்கும் பொழுதே சாப்பிட களி ருசியாக இருக்கும்.