பிரிதல் எனும் புரிதல்

காலச் சாகரம் கரைசேர்த்த
சில உறவுகள்
கலாச்சாரம் போட்ட வேலியால்
நடுக்கடலில் பிரிந்து போகாமல்
ஒரு விடியலின்
வலிகளில் பிரிந்துபோனது.
சில நிமிடங்களும் கதைகளாகும்….
சொற்கள் அனைத்தும் தத்துவங்கள்.
சொல்லிவிட்டுப் போகும்
வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களும்
ஏதோ பாடங்கள் சொல்லத்தான்
முனைகின்றன
பல நேரங்களில் அது புரிவதில்லை
பலருக்கு……
பிரிதலும் புரிதல் தான் ….
இருவரும் குற்றவாளியாக இருந்தாலும்
ஒருவர் மற்றவரை
நியாயப்படுத்தத் தெரிந்தவர்கள்
பிரிந்தார்கள்…
கவிதையாகவே...!